பீடி தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பாக பெருந்திரள் முறையீடு திருநெல்வேலி மாவட்டம் குமாரசாமிபுரம் மற்றும் கூடங்குளத்தில் செயல்பட்டு வந்த கிங் பீடி கம்பெனி முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்டதை கண்டித்தும் , 113 பீடி தொழிலாளர்களின் சம்பள பாக்கி ,போனஸ் , உள்ளிட்ட பண பலன்கள் பெற்று தர வலியுறுத்தியும் , தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட PF தொகையை PF அலுவலகத்தில் செலுத்திட நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் இன்று காலை 11 மணிக்கு தொழிலாளர் துறை அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் . சரவணப் பெருமாள் தலைமையில் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது .
Comments