All TUCITU-AIKS-AIAWUCITU-AITUCIn Media

சிஐடியு 15 ஆவது மாநில மாநாடு

0

கும்பகோணம் ஜூன் 18- கோவையில் நடைபெறும் தமிழ்நாடு  அரசு போக்குவரத்து ஊழியர் சங்க 15  ஆவது மாநில மாநாட்டையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தொழிலா ளர் சங்க தலைவருமான பி. ராம மூர்த்தி பிறந்த ஊரான தஞ்சை மாவட் டம் வேப்பத்தூரிலிருந்து தோழர் பி.ராம மூர்த்தி நினைவு ஜோதி பயணம் மாநாட்டை நோக்கி துவங்கியது. தோழர் பி.ஆர் நினைவு ஜோதி பய ணத்திற்கு தஞ்சை மாவட்ட சிஐடியு பொருளாளர் எம்.கண்ணன் தலைமை வகித்தார். மாநாட்டு ஜோதியை கும்ப கோணம் கோட்டம் அரசு போக்கு வரத்து தொழிலாளர் சங்க பொதுச் செய லாளர் மணிமாறன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் கௌரவத் தலைவர் ஆர். மனோகரன், சிஐடியு  மாவட்ட துணைத் தலைவர் ஜீவபாரதி உள்ளிட்ட போக்கு வரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆன்லைன் அபராதத்தை கைவிடுக!

Previous article

CITU Mazdoor

Next article

Comments

Comments are closed.